மேட்டூர் / தர்மபுரி: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 15,040 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 9,263 கன அடியாகக் குறைந்தது.
டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் நேற்று 118.99 அடியாகவும், நீர் இருப்பு 91.86 டிஎம்சியாகவும் இருந்தது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்த ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து நேற்று மாலை 6,500 கன அடியாகக் குறைந்தது.