மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீர் வினாடிக்கு 13,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 8,641 கன அடியாக இருந்த மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நேற்று 8,342 கன அடியாகக் குறைந்தது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியில் இருந்து 13,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்காக 800 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

நீர் திறப்பு நீர் வரத்தை விட அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.
அணையின் நீர்மட்டம் 119.18 அடியிலிருந்து 118.75 அடியாகவும், நீர் சேமிப்பு 92.16 டிஎம்சியிலிருந்து 91.49 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது.