திண்டுக்கல்: கொடைக்கானல் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாகும். பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து இயற்கை அழகை ரசிக்கின்றனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் யானைகள் நடமாட்டம் இருந்ததால், 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நேற்று தடை நீக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், நேற்று இரவு முதல், யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொடைக்கானலில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்குச் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. யானைகள் நடமாட்டம் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் தூண் பாறை, குணா குகை, பைன் காடு, மோயர் பாயிண்ட் மற்றும் பேரிஜம் ஏரி ஆகியவற்றைப் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.