கோவை: கோவை, பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் வளாகத்தில் நேற்று மாலை ஒரு காட்டு யானை நுழைந்தது. வனத்துறை அதிகாரிகள் யானையை காட்டுக்குள் விரட்டினர்.
பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. காட்டு யானைகள் அவ்வப்போது இந்தக் கோயிலுக்கு வருகின்றன.

நேற்று மாலை உணவு தேடி ஒற்றை காட்டு யானை கோயிலுக்குள் நுழைந்தது. பக்தர்கள் அலறி அடித்து ஓடினார்கள்.
வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை காட்டுக்குள் விரட்டி இரவு முழுவதும் கண்காணித்தனர்.