விருதுநகர்: தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வாணையம் இன்று நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பதவிக்கான எழுத்துத் தேர்வில் 1,343 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வாணையத்தால் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு தொழில்நுட்பப் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.

இதற்கான அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் 7 மையங்களில் இன்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 2,048 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் 699 பேர் தேர்வெழுதவில்லை. 1,343 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். தேர்வு நடத்துவதை கண்காணிக்க அனைத்து தேர்வு மையங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.