ஒரு உறுதியான வேலையை விட்டுவிட்டு, கனவுகளை எதிரொலிக்க தொழிலை தேர்ந்தெடுப்பது சாதாரண முடிவல்ல. பெரும்பாலும் நம்மிடம் ஒரு பாதுகாப்பான வழிக்காட்டி இருந்தால் மட்டுமே இந்த முடிவை எடுக்க துணிவான முடிவெடுக்கிறோம். ஆனால், டெல்லியை சேர்ந்த ராஜத் குப்தா என்பவர், தனது பிசினஸ் கனவுக்காக அமெரிக்காவில் ரூ.1.5 கோடி சம்பளமுடன் இருந்த வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பியுள்ளார்.
ராஜத், வெளிநாட்டில் இன்ஜினியரிங் படித்து முடித்த பின், அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் எட்டு ஆண்டுகள் வேலை செய்தார். அங்கு அவருக்கு வருடம் ரூ.1.5 கோடி வரையிலான உயர்ந்த சம்பளம் கிடைத்தது. ஆனால், அந்த சொகுசான வாழ்க்கையை துறந்து, 2023ஆம் ஆண்டு, இந்தியா திரும்பி தொழில் தொடங்கும் எண்ணத்துடன் பயணத்தை ஆரம்பித்தார்.
அமெரிக்காவில் வாழ்ந்த காலத்தில் அவர் கவனித்த ஒரு முக்கிய அம்சம் தான் இந்தியாவில் புதிய பிளாட்ஃபாரம் உருவாக காரணமானது. அங்கு மருத்துவ பிரிஸ்கிரிப்ஷன்கள் எளிதாக புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் இந்தியாவில் அவை குழப்பமூட்டும் வகையில் இருந்ததால், அதை மாற்றும் நோக்கில் “RePill” என்ற பிளாட்ஃபாரத்தை உருவாக்கினார்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அவர் ஒரு வருடம் 12 நபர்களுடன் குழுவாக வேலை செய்தார். 2025 ஜனவரியில் RePill நிறுவனம் தொடங்கப்பட்டது. டெல்லியில் முதற்கட்ட சேவையில் 400க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் வந்ததால், நிறுவனம் வெற்றிகரமாக வளரத் தொடங்கியது. இதனால், அவர் இந்த சேவையை நொய்டா, கூர்காவ் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு விரிவுபடுத்த முடிவு செய்தார்.
RePill பிளாட்ஃபாரம், நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை ஒரு மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யும் சேவையாக செயல்படுகிறது. இதன் மூலம் அவசர மருத்துவ தேவைகளுக்கு நேரடி உதவி வழங்கப்படுகிறது. இந்த சேவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தியா திரும்பி, ஒரு சமூக தேவையை அடிப்படையாகக் கொண்டு, தொழில்முனைவோராக வெற்றிகரமாக உருவெடுத்த ராஜத் குப்தாவின் பயணம், இன்றைய இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. கனவை நம்பும் நபர்கள், இதை ஒரு ஊக்கமூட்டும் கதையாகக் காணலாம்.