இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ எட்ஜ் 50 புரோ ஸ்மார்ட்போன்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் மோட்டோரோலா எட்ஜ் 50 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டினை இந்த போன் கொண்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
*6.7 இன்ச் pOLED டிஸ்பிளே
*குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 3 சிப்செட்
*ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
*மூன்று ஆண்டுகளுக்கான இயங்குதள அப்டேட்
*பின்பக்கத்தில் 3 கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது *50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
4,500mAh பேட்டரி
68 வாட்ஸ் மற்றும் 125 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
8ஜிபி/12ஜிபி ரேம்
256ஜிபி ஸ்டோரேஜ்
வரும் 9-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது
இதன் தொடக்க விலை ரூ.31,999