கர்நாடகாவில் ஸ்ரீராம் சேனை தலைவர் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு
பெலகாவி,
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹிண்டலகா கிராமத்தில் ஸ்ரீராம் சேனா தலைவர் ரவி கோகிதகேரா மற்றும் அவரது டிரைவரும் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மீது மர்மநபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் ரவியின் முகத்தில் காயம் ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் அவரது டிரைவரும் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து, இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ரவி குணமடைந்துள்ளார். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெலகாவி கிராமிய காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.