இந்தியாவின் 78வது கிராண்ட்மாஸ்டர்… கொல்கத்தாவை சேர்ந்த கவுஸ்தவ் சட்டர்ஜி சாதனை…!!!
கொல்கத்தா: மைதானத்தை சுற்றி ஓடி வியர்வை சிந்துவதை விட, ஒரே இடத்தில் அமர்ந்து மூளையை பயன்படுத்தி செஸ் விளையாடுவது மற்ற விளையாட்டுகளை விட சற்று கடினம். கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்வதே ஒவ்வொரு செஸ் வீரரின் கனவு. ஆனால் கிராண்ட் மாஸ்டர் ஆவது எளிதான காரியம் அல்ல.
கிராண்ட் மாஸ்டர் பட்டம்:
சர்வதேச செஸ் சம்மேளனத்தின் கீழ், 2,500 புள்ளிகளை கடந்து 3 வீரர்கள் தொடர்ச்சியாக கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றால் மட்டுமே கிராண்ட் மாஸ்டர் விருது வழங்கப்படும். உலகம் முழுவதும் பலர் கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை வென்றுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் 77 பேர் கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளனர்.
கவுஸ்தவ் சட்டர்ஜி:
அந்த வகையில், இந்தியாவின் 78வது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை கொல்கத்தாவை சேர்ந்த 19 வயதான செஸ் வீரர் கவுஸ்தவ் சட்டர்ஜி பெற்றுள்ளார். 59வது தேசிய சீனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில், மித்ரபாவுக்கு எதிராக டிராவில் போராடி கிராண்ட்மாஸ்டருக்கான இறுதித் தகுதியை எட்டினார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 10வது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையையும் கவுஸ்தவ் சட்டர்ஜி பெற்றுள்ளார்.
முன்னதாக, அக்டோபர் 2021 இல் பங்களாதேஷில் நடைபெற்ற கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், கவுஸ்தவ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்திற்கு தகுதி பெற்றார். அதன்பின் கடந்த நவம்பர் முதல் வாரத்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவதாக தகுதி பெற்றார்.
இந்நிலையில், தேசிய சீனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 சுற்றுகளுக்குப் பிறகு 8 புள்ளிகளுடன் கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கான மூன்றாவது தகுதியைப் பெற்றார். இதேவேளை, கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச செஸ் சம்மேளனத்தின் புள்ளிப்பட்டியலில் கவுஸ்தவ் 2500 புள்ளிகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்தியாவிலேயே முதன்முறையாக 1988ல் தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார்.இவரை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த பிரணவ் கடந்த ஆண்டு இந்தியாவின் 77வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார்.