June 17, 2024

பொங்கல் பண்டிகையையொட்டி கோவில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம்… அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைக்கிறார்

சென்னை,

2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு இரண்டு சீருடைகள் வழங்கவும், அர்ச்சகர்/பட்டாச்சாரியார்/பூசாரி பதவிகளில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு பருத்தி வேட்டி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் ஊழியர்களுக்கு சேலை மற்றும் மற்ற கோயில் ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையும் வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

சென்னை வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் கோயிலில் கோயில் பணியாளர்களுக்கு சீருடை/புது ஆடை வழங்கும் விழாவை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு 10,ஜனவரி அன்று தொடங்கி வைக்கிறார். எனவே கோவில் பணியாளர்களுக்கு சீருடை மற்றும் புதிய சீருடைகளை 10,ஜனவரி அன்று வழங்க கீழ்நிலை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை அன்றைய தினம் மாலைக்குள் மின்னஞ்சல் மூலம் அறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!