April 26, 2024

நடிகையும், பாஜக மகளிர் அணி மாநில துணைத்தலைவருமான ஜெயலட்சுமி கைது

சென்னை: நடிகை கைது… மோசடி வழக்கில் நடிகையும், பாஜக மகளிா் அணி மாநிலத் துணைத் தலைவருமான ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்.

பாடலாசிரியா் சினேகன் ‘சினேகம்’ என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறாா். இந்த அறக்கட்டளையின் பெயரைப் பயன்படுத்தி, பொதுமக்களிடம் பணம் வசூலித்து ஜெயலட்சுமி மோசடி செய்ததாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் சினேகன் புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். தம் மீது சினேகன் தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி புகாா் அளித்து தமது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியாகக் கூறி சினேகன் மீது ஜெயலட்சுமி புகாரளித்தாா். அதன்பேரில், சினேகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் சினேகன் மனு அளித்த நிலையில், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை திருமங்கலத்தில் உள்ள நடிகை ஜெயலட்சுமி வீட்டில் இன்று காலை முதல் சோதனை செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

நடிகை ஜெயலட்சுமி, கைது, சினேகன், புகார், பண மோசடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!