சென்னை: இன்று ஒரே நாளில் பவுனுக்கு 1280 ரூபாய் குறைந்துள்ளது. சர்வதேசப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்றமும் இறக்கமும் இருந்து வருகிறது. கடந்த 16-ம் தேதி ஒரு பவுன் ரூ. 63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ. 64,440-க்கு விற்பனையானது. கடந்த வாரம் சனிக்கிழமை (மார்ச் 29) ஒரு பவுன் ரூ. 66,880 ஆக இருந்தது.
இந்த வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை ரூ. 67,600 திங்கள்கிழமை (மார்ச் 31) மற்றும் ரூ. 68,080-க்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) விற்பனை செய்யப்பட்டது. நேற்று (வியாழக்கிழமை) ஒரு பவுன் ரூ.68,480 -க்கு விற்பனையானது. இதன் காரணமாக தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு பவுண்டுக்கு ரூ.1,600 அதிகரித்தது.

இந்நிலையில் இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1280 குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ரூ. 8,400 மற்றும் ஒரு பவுன் ரூ. 67,2000 -க்கு விற்பனையானது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 4 குறைந்து ஒரு கிராம் ரூ. 108-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ. 1,08,000-க்கு விற்பனையாகிறது.