மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இன்று காலை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 76,188-ல் தொடங்கியது. சென்செக்ஸ் தொடர்ந்து சரிந்து 75,388 என்ற நிலையை எட்டியது. மதியம் 12 மணி நிலவரப்படி, 76 ஆயிரத்தை தாண்டியது. சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியை பொறுத்தவரை, இன்று வர்த்தகம் 23,050-ல் தொடங்கியது. காலை 10 மணியளவில் நிஃப்டி சுமார் 300 புள்ளிகள் சரிந்து 22,818 புள்ளிகளை எட்டியது. மதியம் 12 மணி நிலவரப்படி, நிஃப்டி 23,058 என்ற நிலையை எட்டியது. முன்னதாக, இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் குறியீடு 1,018 புள்ளிகள் சரிந்து 76,293 புள்ளிகளில் நிலைத்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 310 புள்ளிகள் சரிந்து 23,072 புள்ளிகளில் நிலைத்தது.
இதன் காரணமாக முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ. 9.3 லட்சம் கோடி ரூபாய் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்திற்கு 25% வரி விதிக்கப்படும் என மூன்று நாட்களுக்கு முன் அமெரிக்க அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, உலக நாடுகளின் கரன்சி மதிப்பு சரிவு, தங்கம் விலை உயர்வு போன்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.