மும்பை: 7 மாதங்களில் முதல் முறையாக, நேற்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 25,000 புள்ளிகளைத் தாண்டியது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதற்றம் தணிந்த பிறகு பங்குச் சந்தைகள் புதிய உச்சங்களைப் பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில், நேற்றைய வர்த்தகத்தில், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 395 புள்ளிகள் உயர்ந்து 25,062 புள்ளிகளில் நிறைவடைந்தது.

இது கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவு. இதேபோல், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடர்ந்து இரண்டாவது நாளாக நல்ல முன்னேற்றம் அடைந்து 1,200 புள்ளிகள் உயர்ந்து 82,530 புள்ளிகளில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 30 முன்னணி நிறுவன பங்குகளில் 29 பங்குகள் லாபத்துடன் முடிவடைந்தன.
வங்கி, ஆட்டோ, ஐடி, எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் முதலீட்டாளர்களிடையே அதிக தேவை இருந்தது. புதிய வெளிநாட்டு முதலீட்டு வரத்தும் நேற்றைய சந்தை ஏற்றத்தில் இணைந்தது.