சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9000-ஐ நெருங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.8945-க்கு விற்கப்படுகிறது. 2023-ல் கடுமையாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை, இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரின் எதிரொலியாக அதிகரித்தது. அது தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்தது. இந்த வாரம் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 காரட் தங்க நகைகள் ரூ. 8945 அதிகரித்து ஒரு கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு பவுனுக்கு ரூ. 200 அதிகரித்து ரூ.71,560-க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 110-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 1,10,000. தங்கம் விலை தொடர் உயர்வு குறித்து தங்க நகை வியாபாரிகள் கூறியதாவது:-

அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தக போரில் அனைத்து நாடுகளும் சிக்கி உள்ளன. குறிப்பாக, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து தங்கத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது. வர்த்தகப் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை. இதன் காரணமாக பங்குச்சந்தை வீழ்ச்சியால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. வரும் வாரங்களில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை.
ஒரு பவுன் விரைவில் ரூ. 80 ஆயிரம். அதே சமயம் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர வரி விதிப்பை குறைக்கவில்லை என்றால், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு விலை உயரலாம். இது ஆண்டு இறுதிக்குள் ரூ. 1 லட்சம் அடையவும் வாய்ப்பிருக்கிறது. தங்கம் உற்பத்தி எவ்வளவு அதிகரித்தாலும் விலை குறைய வாய்ப்பில்லை. தங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக மக்கள் நாணயத்தில் அதிக முதலீடு செய்கின்றனர். இவ்வாறு கூறினார்கள்.