இந்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள புதிய நடவடிக்கையின் மூலம், தற்போது ஏடிஎம்களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் வழங்கப்படத் தொடங்கியுள்ளன. இதனால் 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்து வருவதை சந்தையில் காண முடிகிறது. இந்தியாவின் ஏறத்தாழ 73% ஏடிஎம்களில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. சில்லறை குறைவால் மக்கள் சந்தித்த வந்த இடையூறுகள் இப்போது குறைவடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக, 500 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்யப்போகிறதா என்ற செய்தி சமீபத்தில் பரவியது. இதனையடுத்து, ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் செப்டம்பர் மாதத்துக்குள் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அதிகரிக்க உத்தரவிட்டது. குறிப்பாக, கிராமப்புறங்களில் இந்த குறைந்த மதிப்புள்ள நோட்டுகள் பெரும் பயன்பாட்டில் உள்ளன. வாடிக்கையாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இது ஒரு நிவாரணமாக அமைந்துள்ளது.
மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், குறைந்தது 75% ஏடிஎம்களில் ரூ.100 அல்லது ரூ.200 நோட்டுகள் வழங்கப்பட வேண்டும் என வங்கிகள் கட்டாயப்படுத்தப்பட்டன. 2026 மார்ச் 31க்குள், 90% ஏடிஎம்களில் இந்நோட்டுகள் இருக்க வேண்டும் என்பதுதான் வங்கி நிர்ணயித்த இலக்கு. இது மக்கள் தினசரி பண பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.
இதேவேளை, ஏடிஎம் பரிமாற்றக் கட்டணங்கள் மே 1 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலவச பரிவர்த்தனை வரம்பை கடந்துவிட்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இது வாடிக்கையாளர்களுக்கு சுமையாக இருக்கலாம் என்றாலும், பணம் எடுக்கும் வசதியில் ஏற்பட்ட மாற்றம் மக்கள் எதிர்பார்த்த நன்மையாக கருதப்படுகிறது. பொதுமக்கள் ரொக்கத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் சூழ்நிலையில், இந்த நடவடிக்கைகள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.