சென்னை: தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.9000ஐ தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 2023-ல் கடுமையாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை, இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரின் எதிரொலியாக அதிகரித்தது. இதையடுத்து, ஏறி இறங்கியது. இந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.70 காசுகள் உயர்ந்து ரூ.9,015 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு பவுன் ரூ.560 உயர்ந்து ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.111 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி கட்டி ரூ.1,11,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர் உயர்வு குறித்து தங்க நகை வியாபாரிகள் கூறியதாவது:- அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தக போரில் அனைத்து நாடுகளும் சிக்கி உள்ளன. குறிப்பாக, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து தங்கத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது.

இதுவரை வர்த்தகப் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதன் காரணமாக பங்குச்சந்தை வீழ்ச்சியால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. வரும் வாரங்களில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை. ஒரு பவுன் விரைவில் ரூ. 80 ஆயிரத்தை தொடும். அதே சமயம் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர வரி விதிப்பை குறைக்கவில்லை என்றால், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு விலை உயரலாம்.
இது ஆண்டு இறுதிக்குள் ரூ. 1 லட்சத்தை அடையவும் வாய்ப்பிருக்கிறது. தங்கம் உற்பத்தி எவ்வளவு அதிகரித்தாலும் விலை குறைய வாய்ப்பில்லை. தங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக மக்கள் நாணயத்தில் அதிக முதலீடு செய்கின்றனர். இவ்வாறு கூறினார்கள்.