ஒருவர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, வங்கியின் விதிமுறைகளை பூர்த்தி செய்ய முடியாதபட்சத்தில், துணை விண்ணப்பதாரரை அழைத்து வரும்படி கூறி, விண்ணப்பம் நிராகரிக்கப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நேர்ந்துவிடும். இது பெரும்பாலும் குறைவான கிரெடிட் ஸ்கோர், வருமான அளவு மற்றும் ஏற்கனவே உள்ள கடன்களின் சுமை போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

இந்நிலையில், ஜாயின்ட் லோனுக்கு ஒப்புக் கொள்வதற்கும், அதனால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் நன்மைகளையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஜாயின்ட் லோனில் நீங்கள் முதன்மை கடன் பெறுபவராக இருந்தாலும் சரி, துணை விண்ணப்பதாரராக இருந்தாலும் சரி, இருவரையும் இது சமமாக பாதிக்கும்.
வங்கிகள், கடன்கள் வழங்கும் முன் குறைந்தபட்சமாக 750 கிரெடிட் ஸ்கோர் எதிர்பார்க்கின்றன. ஆனால், குறைவான ஸ்கோர் இருந்தால், நல்ல கிரெடிட் வரலாற்று கொண்ட ஒருவரை துணை விண்ணப்பதாரராக சேர்ப்பது கடனை பெற உதவியாக இருக்கும். அதேபோல், குறைந்த வருமானம் கொண்டவர்கள், அதிக கடன்-வருமான விகிதம் உள்ளவர்கள் ஆகியோருக்கும் இந்த ஏற்பாடு தேவையாகலாம்.
ஜாயின்ட் லோனுக்கான விண்ணப்பத்தில், இருவரது கிரெடிட் ரிப்போர்ட்டும் மற்றும் கடன் வரலாறும் வங்கியால் பரிசீலிக்கப்படும். முன்பு செலுத்தப்படாத அல்லது தாமதமான EMIகள், மூடப்படாத கடன்கள் உள்ளிட்டவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருவருக்கும் நல்ல வரலாறு இருந்தால்தான் கடன் அங்கீகரிக்கப்படும்.
ஜாயின்ட் லோனில் தவறான செலுத்தல் நடவடிக்கைகள் இருவருக்கும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். EMI முறையாக செலுத்தப்படாமல் இருந்தால், அதற்கான நஷ்டம் இருவரும் எதிர்கொள்ள வேண்டும். 90 நாட்களுக்கும் மேலாக தவறிய பேமென்ட், கிரெடிட் வரலாற்றில் 7 ஆண்டுகள் வரை பதியப்படும்.
உங்களுடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் துணை விண்ணப்பதாரராக ஒப்புக்கொள்ளுமாறு கேட்டால், சிந்தித்து முடிவு செய்வது முக்கியம். நேர்மையான செலுத்தல் நடைமுறைகள் இருந்தால் இது உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு நன்மையாக இருக்கும். ஆனால், தவறுகள் நிகழ்ந்தால் அது உங்கள் நன்மைத்தன்மையை பாதிக்கும். கடனைப்பற்றி முழுமையான தகவல்கள் மற்றும் எதிர்வினைகளை அறிந்த பின் மட்டுமே துணை விண்ணப்பதாரராக செயல்படுவது புத்திசாலித்தனமான முடிவாகும்.
இது உங்கள் நிதி எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய ஒரு தீர்மானம் என்பதால், தேவையான சிந்தனையும், ஆலோசனையும் பெறுவது அவசியம்.