சென்னை: வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளணுமா. வெயிலை சமாளிக்க உதவும் வழிகளை முன்கூட்டியே அறிந்து வைத்துக்கொள்வது நல்லது.
குறிப்பாக கடும் வெயிலை கூட ஒன்றுமில்லாமல் ஆக்கும் கீழ்வரும் 7 பாரம்பரியமான பானங்களை பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மோர் : இது ஒரு புரோபயாடிக் பானமாகும், இது குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது, இதனால் கோடை காலத்தில் பலரையும் பாதிக்கப்படக்கூடிய வயிற்று தொற்றுகள் முற்றிலுமாக தவிர்க்கப்படலாம். ஒரு கிளாஸ் (200 மில்லி) மோரில் சுமார் 30 கலோரிகள் உள்ளன. குறிப்பாக ஒரு மண் பானையில் சேமிக்கப்படும் மோர், ஒரு தனித்துவமான சுவையை கொடுக்கும்.
இளநீர் : எலக்ட்ரோலைட்டுகளால் நிரம்பிய மற்றும் மிக குறைந்த நேச்சுரல் சுகர் கொண்ட ஒரு பானம் – இளநீர். ஒரு கிளாஸ் தேங்காய் தண்ணீரில் 30 கலோரிகள் உள்ளது. இது சிறுநீரக கற்களைத் தடுக்கவும் உதவும்.
சோல் காடி (Sol Kadi): இது கோவா, கர்நாடகா மற்றும் கேரளாவின் கடலோரப் பகுதியில் வளர்க்கப்படும் கோகம் பழத்தின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பானம் ஆகும். கோகம் பழ சாற்றில் தேங்காய் பால், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் உப்பு கலந்து, சிறிது கொத்தமல்லியும் தூவி விட சோல் காடி, ரெடி! ஒரு காரமான உணவை உட்கொண்ட பிறகு வயிற்றை குளிர்விக்க, செரிமானத்தை அதிகரிக்க உதவும் இந்த பானம், பசியை அடக்கவும், கொழுப்புக்களை குறைக்கவும் உதவுகிறது.
ஜல்ஜீரா (Jaljeera) : அதாவது – சீரக தண்ணீர். சீரகத்துடன் இஞ்சி, கருப்பு மிளகு, புதினா மற்றும் ட்ரை மேங்கோ பவுடர் ஆகியவற்றின் கலவையே ஜல்ஜீரா. சீரகம் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் உணவு கனிமங்களை நல்ல அளவில் வழங்கும் ஒரு மருத்துவப் பொருளாகும். இது குமட்டல், உணவுக்குப் பிறகான ப்ளோட்டிங் மற்றும் அஜீரணத்திலிருந்து நிவாரணம் அளிக்கும். இதில் சேர்க்கப்படும் புதினா இலைகள் வெயிலை சமாளிக்க உதவும் குளிர்ச்சியை வழங்கும்.