மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் நடுரோட்டில் மோதல்… குவாலியர் நகரில் பரபரப்பு
குவாலியர்,
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில், தான்சென் நகர் பகுதியில் மாணவர்கள் குழு ஒன்று திடீரென நடுரோட்டில் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டது. அவர்கள் கையில் பட்டைகள், கத்திகள் மற்றும் வாள்கள் இருந்தன.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் நடந்தவுடன் அவ்வழியாக சென்றவர்கள் பயந்து அலறி அடித்து அவர்களை தடுக்க முயன்றனர்.
இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். எனினும், தாக்குதல் நடத்திய அனைவரும் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து குவாலியர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.