மதுரை: மதுரையில் பெய்த மழையால் தரையிறங்க முடியாமல் வானில் 40 நிமிடங்கள் வட்டமடித்த விமானம் பின்னர் மீண்டும் பத்திரமாக தரையிறங்கியது.
ஐதராபாத்தில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது. திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்புவனம் பகுதிகளில் சுமார் 40 நிமிடம் விமானம் வானில் வட்டமடித்தது.
விருதுநகர் வழியாக கோவில்பட்டி வரை சென்று மீண்டும் மதுரை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.