வாஷிங்டன்: அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனா வரி விதித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், “தேவையில்லாமல் மறுபடியும் சீனா தவறு செய்கிறது” என்று கடுமையாக சாடியுள்ளார்.
அதிபராக பதவி ஏற்ற அன்றே, அமெரிக்காவுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளின் பொருட்களுக்கு அதிரடியாக வரி போடுவோம் என்று டிரம்ப் கூறியிருந்தார். அதன் பிறகு, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள வரியுடன் சேர்த்து, கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்தார்.

சீனா, அமெரிக்காவின் சில பொருட்களுக்கு 10 முதல் 15 சதவீதம் வரி விதித்து, பதிலடி கொடுத்துள்ளது. அதில், அமெரிக்காவின் சோயா பீன்ஸ், பால் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு 10 சதவீதமும், கோதுமை, மக்காச்சோளம் உள்ளிட்ட பொருட்களுக்கு 15 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இது பதிலாக, சீனா 34 சதவீதம் வரி விதித்து, அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு ஏப்ரல் 9ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
இந்த நடவடிக்கை பற்றி சீனாவின் வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டது. அதில், அமெரிக்காவின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது என்றும், இந்த விவகாரத்தில் நியாயமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, “அமெரிக்கா விதித்த 34 சதவீத வரிக்கு பழிக்குப் பழியாக, நாங்களும் அதே அளவு வரி விதித்துள்ளோம்” என்று கூறப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், டிரம்ப் “தேவையில்லாமல் மறுபடியும் சீனா தவறு செய்கிறது” என்று கடுமையாக கூறியுள்ளார்.