வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்த விமானம் எப்போது அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்தியாவிற்கு எப்போது வரும். இந்நிலையில், இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் சி-17 விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, சுமார் 18,000 இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வருவதாகத் தெரிகிறது. அமெரிக்காவில் மொத்தம் 1.05 மில்லியன் மக்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. “அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது” என்ற முழக்கத்துடன் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்தார்.
அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுதான் டொனால்ட் டிரம்பின் வெற்றிக்கு வழி வகுத்தது. அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற நாள் முதல் டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறார். இதில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அந்தந்த நாடுகளுக்கு அனுப்புவது மிக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் அதிக அளவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இந்தியர்களின் பங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், “அமெரிக்காவின் முடிவை அரசு என்ற முறையில் நாங்கள் ஆதரிக்கிறோம். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை திரும்ப ஏற்க தயாராக உள்ளோம்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிக்கொண்டு அந்நாட்டிலிருந்து ராணுவ விமானம் ஒன்று இந்தியாவுக்கு புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
7,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள்: அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் படிக்க வெளிநாட்டு மாணவர்களுக்கு F-1 விசா வழங்கப்படுகிறது. அதேபோல் கல்வி சுற்றுலாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு எம்1 விசா வழங்கப்படுகிறது. இந்தியா, சீனா, பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த எஃப்1 மற்றும் எம்1 விசாக்களில் அமெரிக்காவுக்கு வரும் மாணவர்கள் தங்கள் விசா காலாவதியான பிறகும் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கிறார்கள்.
இவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள், அவர்களில் 7,000 க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். எச்1பி விசா பெற்று அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களும் விசா காலாவதியான பிறகும் இங்கேயே தங்குகிறார்கள்.