வாஷிங்டன்: கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, டொனால்ட் டிரம்ப், “நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் உக்ரைன்-ரஷ்யா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவேன்” என்று உறுதியளித்தார். டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாதங்களுக்கும் மேலாக, உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் தொடர்கிறது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானதிலிருந்து விளாடிமிர் புடினுடன் ஐந்து முறை தொலைபேசியில் பேசியுள்ளார். ஒவ்வொரு பேச்சுவார்த்தைக்குப் பிறகும் மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தி வரும் டொனால்ட் டிரம்ப், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு முதல் முறையாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விளாடிமிர் புதினுடனான தனது தொலைபேசி உரையாடல் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், “எங்கள் தொலைபேசி உரையாடல் நீண்டது. ஈரான் உட்பட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். உக்ரைனுடனான போர் குறித்தும் பேசினோம்.
ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. இது குறித்து நான் மகிழ்ச்சியடையவில்லை. விளாடிமிர் புடினில் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். உக்ரைனில் போரை அவர் நிறுத்துவார் என்று தெரியவில்லை” என்றார்.