உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் புடின் அழைத்த நேரடி பேச்சுவார்த்தையில் பங்கேற்க தயார் என தெரிவித்துள்ளார். துருக்கியில் மே 15ஆம் தேதி சந்திக்கவும், தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.ஜெலன்ஸ்கி, ”போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்.

நீடித்த அமைதிக்காக எங்களது முயற்சி தொடரும்” என்றார்.இரு நாடுகளுக்கு இடையிலான போர் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அமைதிக்கு இது முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.புடின் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ”அமைதிக்கு வழிவகுக்கும் பேச்சுவார்த்தை மே 15ஆம் தேதி துருக்கியில் நடத்த விரும்புகிறேன்” என தெரிவித்திருந்தார்.
இதற்காக அவர் ஜெலன்ஸ்கிக்கு நேரடியாக அழைப்பு விடுத்தார்.ஜெலன்ஸ்கி, இதற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, தன்னால் உரிய நேரத்தில் சந்திக்க முடியும் என உறுதியளித்துள்ளார்.அமைதி நிலை திரும்ப வேண்டுமென உலக நாடுகள் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் நடைபெறும் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.ஜெலன்ஸ்கி, ”இது சாக்குப்போக்கு இல்லாத நேர்மையான சந்திப்பாக இருக்கும்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.