சென்னை: சமூக வலைதளமான ‘எக்ஸ்’ திடீரென முடங்கி, உலகம் முழுவதும் உள்ள பயனர்களை கடும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த பிரச்சனை உருவாகியது. பயனர்கள் தங்களது கணக்குகளில் லாகின் செய்ய முடியாமல் தவித்தனர். ஏற்கனவே உள்ள பதிவுகளைப் பார்க்கவும், புதிதாக பதிவிடவும் முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த தொழில்நுட்ப சிக்கலால், பலருக்கு “Something went wrong, Try reloading” என்ற தகவல் மட்டும் திரையில் வந்தது. இந்த பிரச்சனை தொடர்பாக Down Detector இணையதளத்தில் சுமார் 2,100 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது சாதாரண செல்போன்கள் மட்டுமின்றி, டெஸ்க்டாப் கணினிகளிலும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டரை வாங்கி ‘எக்ஸ்’ என்ற புதிய பெயரில் மாற்றியதையடுத்து இது போன்ற தொழில்நுட்ப தடை பலமுறை நிகழ்ந்துள்ளது. கடந்தகாலத்தில் கூட சில பயனர்கள் அதேபோன்ற பிரச்சனையை சந்தித்திருந்தனர். அப்போது சிறிது நேரத்தில் சரியானது.
இன்றைய தொழில்நுட்ப சிக்கல் எக்ஸ் வலைதளத்திற்கு இது முதல் முறையல்ல. முன்னதாகவும் இதுபோன்ற சிக்கல்கள் பலமுறை எழுந்துள்ளன. இப்போதும் சில பயனர்கள் மற்ற சமூக வலைதளங்களில் தங்களின் சிக்கல்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அதே சமயம், சில பயனர்கள் எக்ஸ் பக்கம் வழக்கம்போல் வேலை செய்ததாக கூறுகிறார்கள்.
இதுவரை எக்ஸ் நிறுவனத்தின் தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கப்படவில்லை. வலைதள தடை எப்போது சரியாகும் என்பது குறித்தும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. பயனர்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் தங்களின் கணக்குகளை பயன்படுத்த முடியாத நிலை தொடர்கிறது.
இதனால் பலரும் இணையத்தில் குரல் எழுப்பி வருகின்றனர். ‘எக்ஸ்’ நிறுவனம் விரைவில் நடவடிக்கை எடுத்து, தொழில்நுட்ப சிக்கல்களை சரி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை