புது டெல்லி: 2021-ல் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறின. அதன் பிறகு, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, பெண் கல்வி, பெண் சுதந்திரத்தைப் பேணுவது, உலகத்துடன் நட்புறவை ஏற்படுத்துவது என அவர்கள் உறுதியளித்தனர். இருப்பினும், அந்த அறிவிப்புக்கு மாறாக பல்வேறு சட்டங்களை அவர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, ஆப்கானிஸ்தானில் சதுரங்கத்திற்கு தடை விதிப்பதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

இந்தத் தடை மே 11 அன்று பிறப்பிக்கப்பட்டது. இந்த விளையாட்டு மத கலாச்சாரத்திற்கு எதிரானது என்று புகார்கள் வந்தன. இந்த சூழ்நிலையில், இந்த விவகாரம் மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும் வரை தடை அமலில் இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து விளையாட்டு நிகழ்வுகளையும் ஒழுங்குபடுத்தும் தாலிபான்களின் விளையாட்டு இயக்குநரகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஷரியா சட்டத்தின் கீழ் சதுரங்கம் சூதாட்டமாகக் கருதப்படுகிறது என்று கூறப்படுகிறது. தொழிலதிபர் அசிசுல்லா குல்சாடா கடந்த சில ஆண்டுகளாக சதுரங்க வணிகத்தை நடத்தி வருகிறார். “இந்த உத்தரவை நான் மதிக்கிறேன். அதே நேரத்தில், இந்த தடை எங்கள் வணிகத்தையும் பாதிக்கும்” என்று அவர் கூறினார். இந்த முடிவு சதுரங்க வீரர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.