வாஷிங்டன்: வரி அச்சுறுத்தலுக்குப் பிறகு பிரிக்ஸ் குழு சரிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். பிரிக்ஸ் குழு அமெரிக்க டாலரை அழிக்க முயன்றதாக அவர் கூறினார். அவர்கள் ஒரு புதிய நாணயத்தை உருவாக்க விரும்பினர். நான் அதிபராகப் பதவியேற்ற பிறகு, டாலரை அழிக்க முயற்சிக்கும் நாடுகளுக்கு 150 சதவீத வரி விதிப்பேன் என்று எச்சரித்தேன்.
பிரிக்ஸ் குழு தற்போது சரிந்துவிட்டதாக அவர் கூறினார். வரி அச்சுறுத்தலுக்குப் பிறகு, பிரிக்ஸ் குழு பற்றி எந்த செய்தியும் இல்லை. அவர்களுக்கு என்ன ஆனது என்று தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார்.
பிரிக்ஸ் குழு பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளுடன் தொடங்கப்பட்டது. தற்போது இந்தக் குழுவில் தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.