பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள முரிட்கேய் பகுதியில், இந்திய ராணுவம் நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலில், ஜமாத் உத்-தாவா அமைப்பின் முக்கிய தலைமையகம் முழுமையாக தரைமட்டமாக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, இந்தியா மேற்கொண்ட கடுமையான பதிலடிகளில் ஒன்றாகும்.
இந்த தாக்குதலில், பயங்கரவாதிகள் அப்துல் மாலிக், காலித் மற்றும் முதாசிர் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களின் இறுதிச் சடங்குகள் நேற்று முரிட்கேய் பகுதியில் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டன. அந்த நிகழ்வில் பாகிஸ்தான் ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றதாக, ஜமாத் உத்-தாவாவின் அரசியல் அங்கமான பாகிஸ்தான் மார்கஜி முஸ்லிம் லீக் செய்தி தொடர்பாளர் தபிஸ் கய்யூம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பாக் ராணுவத்தின் உடனடி பங்கேற்பும் கண்டமளிக்கப்பட்டது. மூவரின் உடல்களும் நிகழ்வுக்குப் பின் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. இந்த நிகழ்வுகள், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்பு தொடர்பான சந்தேகங்களை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த தகவல்கள் வெளிவந்ததையடுத்து, சர்வதேச ரீதியாகவும், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் மேலும் வலுப்பெற்றுள்ளன. இந்தியா தொடர்ந்து இந்த அமைப்புகளை விசாரித்து, தாக்குதல் முனையங்களை குறிவைத்து துல்லியமாக தாக்கி வருகிறது.
முரிட்கேயில் இருந்த ஜமாத் உத்-தாவா தலைமையகம், நீண்டகாலமாக பயங்கரவாதக் களமாக செயல்பட்டு வந்தது. இதனைக் கண்காணித்து வந்த இந்திய உளவுத்துறை, கடந்த சில வாரங்களாக அங்கு ராணுவ இயக்கங்கள் நடைபெறுவதற்கான அடையாளங்களை உறுதி செய்திருந்தது.
இந்த தாக்குதலுக்கு பின் முரிட்கேய் முழுவதும் பதற்ற சூழ்நிலை நிலவுகிறது. பாகிஸ்தான் அரசும் ராணுவமும் இதுபோன்ற சம்பவங்களை பொதுமக்களிடமிருந்து மறைக்க முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் செய்தி ஊடகங்கள் மூலம் இந்த தகவல்கள் விரைவாக பரவி வருகின்றன.
இந்திய ராணுவம் தற்போது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. “ஆபரேஷன் சிந்தூர்” வெற்றிகரமாக முடிந்ததைக் கொண்டாடும் வகையில், ராணுவ வட்டாரங்களில் உற்சாகம் நிலவுகிறது.
பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மூன்று பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் நேரில் பங்கேற்றது, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வரும் – “பாக் ராணுவம் பயங்கரவாதத்திற்கு நேரடி ஆதரவு அளிக்கிறது” என்ற குற்றச்சாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் நிலையில் உள்ளது.
இது போன்ற தாக்குதல்களால் பயங்கரவாத அமைப்புகளின் ஆதாரத் தளங்களை ஒழிப்பது மட்டுமல்லாமல், அவற்றின் அரசியல் மற்றும் ராணுவ ஆதரவையும் வெளிச்சத்தில் கொண்டுவர முடிகிறது.
இந்த செயல்பாடுகள் தொடரும் நிலையில், பாகிஸ்தானின் பயங்கரவாத ஒத்துழைப்புகள் குறித்து உலக நாடுகள் எப்போது கூடி நடவடிக்கை எடுக்கும் என்பதுதான் எதிர்பார்ப்பு.