ஜம்மு: இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை நேற்று பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3880 மீ உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் உருவாக்கப்பட்ட பனி லிங்கத்தைக் காண பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை நேற்று தொடங்கியது. முன்னதாக, ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று முன்தினம் இரவு ஜம்முவிலிருந்து முதல் குழுவை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சூழ்நிலையில், 5200 பேர் கொண்ட இரண்டாவது குழு நேற்று ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் காண்டர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரையைத் தொடங்கியது.

பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து புறப்பட்ட இரண்டாவது குழுவில் 4,74 ஆண்கள், 786 பெண்கள் மற்றும் 19 குழந்தைகள் உள்ளனர். இதுவரை மொத்தம் 11,138 பேர் அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுள்ளனர்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 9-ம் தேதி நிறைவடையும்.