சென்னை: சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை இடையே பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், இன்று முதல் 3 நாட்களுக்கு 19 மின்சார ரயில்களின் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, ஆகஸ்ட் 14, 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் காலை 10.30, 11.35 மணிக்கும், சென்னை சென்ட்ரல் – சூலூர்ப்பேட்டை காலை 10.15, மதியம் 12.10, மதியம் 1.05 மணிக்கும், சூலூர்ப்பேட்டை – சென்னை சென்ட்ரல் மதியம் 1.15, மதியம் 3.10, இரவு 9 மணிக்கும் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி காலை 9.40, மதியம் 12.40, கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை காலை 10.55, கும்மிடிப்பூண்டி – சென்னை சென்ட்ரல் பிற்பகல் 12.00, மதியம் 2.30, 3.15, சூலூர்பேட்டை – நெல்லூர் பிற்பகல் 1.15, நெல்லூர் – சூலூர்பேட்டை மாலை 6.45 ரத்து செய்யப்படுகின்றன.

காலை 9.55 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில், பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில், பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி – தாம்பரம் மின்சார ரயில், பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை மின்சார ரயில் ஆகியவை பகுதியளவு ரத்து செய்யப்படும்.
ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்களுக்குப் பதிலாக, அதே நாட்களில் சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை இடையே பொன்னேரிக்கு தலா ஒரு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். மீஞ்சூர் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே ஒரு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும்.