புது டெல்லி: ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று திரும்பிய முதல் இந்திய விண்வெளி வீரர் ஆன பிறகு இந்தியா திரும்பிய சுபான்ஷு சுக்லா, நேற்று முன்தினம் பிரதமர் மோடியைச் சந்தித்து தனது விண்வெளி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் வைரலானது. அதில், சுபான்ஷு சுக்லா, “இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் உலகம் முழுவதும் அதிக ஆர்வம் உள்ளது.

ஆக்ஸியம்-4 திட்டத்தில் இருந்த எனது குழு உறுப்பினர்கள் பலர் ககன்யான் ஏவுதல் பற்றி அறிய விரும்பினர். அவர்கள் ககன்யானில் பயணிக்க விரும்புகிறார்கள்.
இந்தியாவின் எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு 40 முதல் 50 விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவைத் தயார்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.”