பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜனதா தளத் தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் நேற்று ஒரு சமூக ஊடகப் பதிவில் கூறியதாவது:-
2005-ம் ஆண்டு ஜனதா தளம் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண்களை தன்னிறைவு பெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியின் தொடர்ச்சியாக, பெண்கள் நலனுக்காக மற்றொரு முக்கியமான முடிவை எடுப்போம்.

முதலமைச்சரின் பெண்கள் வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் கீழ், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் செப்டம்பர் மாதத்தில் இதன் மூலம் பயனடையலாம். இது நீண்ட காலத்திற்கு பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் தொழில் தொடங்க ரூ.10 ஆயிரம் ஆரம்ப நிதி உதவி வழங்கப்படும்.
6 மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் தொடங்கிய தொழில் மதிப்பீடு செய்யப்படும். அதன் பிறகு, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப ரூ.2 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும். கூடுதலாக, பெண்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய மாநிலம் முழுவதும் சந்தைகள் திறக்கப்படும் என்று அது தெரிவித்துள்ளது.