புது டெல்லி: இந்தியா பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், மியான்மர் மற்றும் பூட்டானுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. மேலும், இலங்கை மற்றும் மாலத்தீவுகள் போன்ற தீவு நாடுகள் இந்தியாவுக்கு அருகில் அமைந்துள்ளன. சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை மிக நீண்ட காலமாக நடந்து வருகிறது. எல்லைப் பிரச்சினை தொடர்பாக 1962-ம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு பெரிய போர் நடந்தது.
2017-ம் ஆண்டு, சிக்கிமின் டோக்லாம் பகுதியில் இரு நாடுகளும் 73 நாள் மோதலைச் சந்தித்தன. மே 2020-ல், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே ஒரு பெரிய மோதல் ஏற்பட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும் 1947, 1965, 1971 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் கட்டுப்பாட்டுக் கோட்டுக்காகப் போர் தொடுத்துள்ளன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இரு நாடுகளும் மே மாதம் நான்கு நாள், தீவிரமான போரை நடத்தின.

இந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:- அனைத்து துறைகளிலும் கண்காணிப்பு மற்றும் ஆயுதங்களை எடுத்துச் செல்ல ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. தகவல் தொடர்பு மற்றும் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சூழலில், அனைத்து துறைகளையும் கண்காணிக்க 5,000 சிறப்பு ட்ரோன்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவை ஒரு கேபிள் மூலம் தரையுடன் இணைக்கப்படும். அதன்படி, ட்ரோன்கள் சுமார் 100 மீட்டர் உயரத்தில் பறக்கும்.
இவை சுமார் 10 கி.மீ. வரம்பைக் கொண்டிருக்கும். தொலைவில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். ஒரு ட்ரோன் 9 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த ட்ரோன்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். சிறப்பு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ட்ரோன்கள் செயற்கைக்கோள்களுடன் இணைக்கப்படும். காஷ்மீர், லடாக் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் மலைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளில் சிறப்பு ட்ரோன்கள் ஈடுபடும்.
இந்த ட்ரோன்கள் ஒரு கேபிள் மூலம் தரையுடன் இணைக்கப்படும். இதேபோல், கொந்தளிப்பு உள்ள கடல் பகுதிகளில் ட்ரோன்கள் பணியில் ஈடுபடும். அனைத்து வானிலை நிலைகளிலும் சிறப்பு ட்ரோன்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும். இந்த ட்ரோன்கள் இந்தியாவின் ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு அமைப்புடன் ஒருங்கிணைக்கப்படும். இது எதிரி வான் தாக்குதல்களை இந்தியா மிக எளிதாக எதிர்கொள்ள உதவும். இது இந்திய ராணுவ அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.