டெல்லி: தனிநபர்-வணிக UPI பரிவர்த்தனைகளுக்கான வரம்பை அதிகரிப்பதாக NBCI அறிவித்துள்ளது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) வெளியிட்டுள்ள அறிவிப்பில், UPI பரிவர்த்தனைகளுக்கான வரம்பு அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, தனிநபர்-வணிக பரிவர்த்தனைகளுக்கு இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மூலதனச் சந்தையில் முதலீடு செய்வதற்கும், காப்பீட்டு பிரீமியம், பயண முன்பதிவு செய்வதற்கும், அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் பரிவர்த்தனையை 24 மணி நேரத்தில் செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு கட்டணங்களுக்கான வரம்பு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 6 லட்சம் வரை செலுத்தலாம், மேலும் கடன்கள் மற்றும் மாதாந்திர தவணைகளுக்கான வரம்பு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் இப்போது நகைகளை வாங்க UPI மூலம் ஒரு நாளைக்கு ரூ.6 லட்சம் செலுத்தலாம், மேலும் வங்கி வைப்புத்தொகை மற்றும் கால வைப்புத்தொகைக்கான பரிவர்த்தனை வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, வணிகங்களுக்கும் பயனளிக்கும் என்று கூறிய NPCI, தனிநபர்களுக்கான பரிவர்த்தனை வரம்பு முன்பு போலவே ஒரு நாளைக்கு ரூ.1 லட்சமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை 15.09.2025 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.