திருவனந்தபுரம்: கடந்த சில மாதங்களாக கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட கேரளத்தின் சில மாவட்டங்களில் அமீபா மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், இந்த மாதம் இதுவரை 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியைச் சேர்ந்த ரக்கீம் (59) இரண்டு நாட்களுக்கு முன்பு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ரஹீம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த மாதத்தில் மட்டும், அமீபிக் மூளைக்காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை, 18 பேர் அமீபிக் மூளைக்காய்ச்சலால் இறந்துள்ளனர்.