சென்னை: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டையைப் புதுப்பிப்பதற்கான சேவைக் கட்டணத்தை அதிகரித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வங்கி சேவைகள், அரசு சேவைகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற ஆதார் அட்டை அவசியம்.
இந்த சூழலில், பயனர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க ஆதார் சேவை மையங்களில் கட்டணம் செலுத்த வேண்டும். பயனருக்கு வழங்கப்படும் சேவைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், UIDAI இந்த சேவைக் கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதன்படி, ஆதார் பயனர்கள் இப்போது பயோமெட்ரிக் புதுப்பிப்புக்கு ரூ. 125 கட்டணம் செலுத்த வேண்டும்.

அதேபோல், ஆதாரில் பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பிக்க ரூ. 75 செலுத்த வேண்டும். முன்னதாக, இந்தக் கட்டணம் ரூ. 100 மற்றும் ரூ. 50. இந்தப் புதிய கட்டண உயர்வு செப்டம்பர் 30, 2028 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஜூன் 14, 2026 வரை ‘மை ஆதார்’ போர்டல் மூலம் அடையாளம் மற்றும் முகவரியை இலவசமாகப் புதுப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறார்களின் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க செப்டம்பர் 30, 2026 வரை கட்டணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.