புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல், சோனியா காந்திக்கு எதிராக புதிதாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்ததுடன், அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.
2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை மோசடியாக அபகரிக்க முயன்றதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், அமலாக்கத்துறை புகாரின் பேரில் காங்கிரஸ் தலைவர் சோனியா, எம்பி ராகுல் காந்திக்கு எதிராக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் புதிதாக எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.