கனமழை காரணமாக ஹைதராபாத் மற்றும் வடக்கு தெலுங்கானா பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக அடிலாபாத், நிர்மல், ஜக்தியால் மற்றும் மஞ்சேரியல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென பலத்த மழை பெய்தது, நகரத்தை சிறிது நேரம் குளிரச் செய்தது.
மஹ்பூபாபாத், பத்ராத்ரி கொத்தகுடேம் மற்றும் கம்மம் பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. மேலும், பத்ராத்ரி கொத்தகுடேமில் உள்ள மட்டுகுருவில் 45.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஹைதராபாத்தில் பல்வேறு பகுதிகளில் மழை குறைவாக இருந்தாலும், சில இடங்களில் 2.5 மிமீ முதல் 15.5 மிமீ வரை மழை பதிவாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாநிலத்தில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.