பூந்தமல்லி: மதுக்கடை நடத்திக் கொண்டு… மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது ஏமாற்று வேலை என்று முன்னாள் அமைச்சர் செம்மலை விமர்சனம் செய்துள்ளார்.
மதுக்கடையையும் நடத்திக் கொண்டு திருமாவளவன் நடத்துகின்ற மது ஒழிப்பு மாநாட்டிலும் தி.மு.க கலந்து கொள்வது என்பது ஜீவகாருண்ய மாநாட்டிலே கசாப்பு கடைக்காரன் கலந்து கொள்வது போல்தான் என முன்னாள் அமைச்சர் செம்மலை விமர்சனம் செய்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் பேட்டியளித்த செம்மலை இதனை தெரிவித்தார்.