
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி.யின் 78-வது பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும், காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இலவச பொது மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார். முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, திருநாவுக்கரசர், எம்எல்ஏக்கள் ரூபி மனோகரன், பழனி நாடார், துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ண சேதுராமன், அமைப்புச் செயலர் ராம் மோகன், பொதுச் செயலர்கள் இல.பாஸ்கரன், டி.செல்வம், தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, இலக்கிய அணித் தலைவர் பி.எஸ். புத்தன், மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ். திரவியம், வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன், ஆர்டிஐ பிரிவு துணைத் தலைவர் மயிலை தரணி, கவுன்சிலர்கள் தீர்த்தி, சுரேஷ், எஸ்.எம். குமார், சூளை ராஜேந்திரன், பி.சந்திரசேகர், துறைமுகம் ரவிராஜ், எம்.வி. நிகழ்ச்சியில் மலையராஜா, மன்சூர் அலிகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சோனியா காந்தி பிறந்தநாளையொட்டி மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன் தலைமையில் சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வில்லிவாக்கம் கல்லு கடை பேருந்து நிலையம் அருகே முன்னாள் மண்டல தலைவர் பாலா ரவிக்குமார் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் டி. ஜான்சன் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், காங்கிரஸ் கொடியை மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.எம். குமார். காங்கிரஸ் துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் ஹரி ரங்கன், கஜபதி, கல்யாணசுந்தரம், நாராயணன், சீதா, புருஷோத்தமன், பால விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.