சென்னை: சென்னை புழல் சிறையில் விசாரணை கைதியாக இருப்பவர் சதீஷ். எனது மனைவி இறந்துவிட்டதால், இறுதிச் சடங்கில் பங்கேற்க எனது மகனுக்கு அவசர விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரி அவரது தந்தை அருள்தாஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்., அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எஸ்.நதியா, ”மனுதாரரின் ஒரே மகன் என்ற அடிப்படையில், சதீஷின் தாயாரின் இறுதி சடங்குகளை செய்ய சிறையில் உள்ள சதீஷுக்கு அவசரகால விடுப்பு வழங்க வேண்டும்,” என்றார். சிறைத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் ஆர்.முனியப்பராஜ், ”மற்ற விசாரணை கைதிகளை போல் சிறை அதிகாரிகளுக்கு அவசர விடுப்பு வழங்க சட்டத்தில் இடமில்லை.

அவர்கள் ஜாமீன் பெற விசாரணை நீதிமன்றத்தை அணுக வேண்டும்” என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கூறியதாவது: நீதிமன்ற விடுமுறையில் விசாரணை கைதியின் தாய் அல்லது தந்தை இறந்தால், அவர் எப்படி இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியும்? எனவே, சிறையில் உள்ள விசாரணைக் கைதியின் தாய், தந்தை இறந்தால், நிபந்தனைகளுடன் கூடிய அவசர விடுப்பு உடனடியாக வழங்குவதற்கான விதிகளை சிறை அதிகாரிகளே வகுக்க வேண்டும். இதற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மனுதாரருக்கு அனுமதி அளித்துள்ளனர்.