பிரபல மலையாள நடிகரும், எம்.பி.யுமான சுரேஷ் கோபி, தமிழ்நாடு தனக்கு விருப்பமான மாநிலம் என்று கூறியுள்ளார்.
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர் சுரேஷ் கோபி. தமிழிலும் நிரபாரதி, கற்பூர முல்லை, தீனா, சமஸ்தானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கேரளாவில் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற சுரேஷ் கோபிக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ் கோபி, கேரள மக்களின் ஆசியால் தான் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளேன்.ஆனால் கேரளாவுக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கும் எம்.பி.யாகவும் பணியாற்றுவேன். தமிழகத்திற்கு பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறையில் பல திட்டங்கள் உள்ளன.
நான் கேரளாவில் பிறந்தாலும் தமிழகம் என்னை வளர்த்து, நடிக்க வாய்ப்பு கொடுத்தது, தூங்க இடம் கொடுத்தது. நான் தமிழ்நாட்டை நேசிக்கிறேன் என்றார்.