புதுடெல்லி: இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான பைஜூஸ் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க என்சிஎல்டி உத்தரவிட்டுள்ளது.
பைஜூஸ் நிறுவனம் சமீப காலமாக கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. பல ஆயிரம் கோடி கடனில் தத்தளித்தது. திடீரென சரிவைச் சந்தித்தால்நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் பாக்கி உள்ளது. வழங்க கால தாமதம் செய்து வருகிறது.
இது தொடர்பாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் விசாரித்தது. சம்பள பாக்கியை வழங்காவிட்டால், இந்திய மத்திய கணக்கு தணிக்கைக்கு உத்தரவிடப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முடிவெடுக்க 48 மணி நேரம் அவகாசம் கேட்டு விசாரணையை ஜூலை 9ம் தேதிக்கு என்சிஎல்டி ஒத்திவைத்தது.