By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகின் முதல் டிரில்லியனர் ஆன எலான் மஸ்க்
    1 Min Read
    முன்னாள் தென் கொரியா அதிபருக்கு 30 ஆண்டு சிறை
    1 Min Read
    இந்திய மாம்பழங்களுக்கு தடையில்லை; நேபாள அரசு விளக்கம்
    1 Min Read
    “ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” – ஜெய்சங்கர்
    1 Min Read
    “அமைதி ஒப்பந்தம் இல்லை!” – டிரம்ப் அறிவிப்பை மறுத்த ஈரான்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
    1 Min Read
    கேரளாவில் மீண்டும் பரவும் ஷிகெல்லா; பள்ளிகளுக்கு விடுமுறை
    1 Min Read
    பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்; பயனர்கள் அவதி
    1 Min Read
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
    CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    6 மணி நேரம் கடின அறுவை சிகிச்சை: 54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்
    2 Min Read
    திருச்சி மண்டலம் சார்பில் தஞ்சையில் ஸ்டேட் வங்கி ஊழியர் கலந்தாய்வு கூட்டம்
    2 Min Read
    ருசித்து சாப்பிட அருமையான சுவையில் குருமா செய்முறை
    1 Min Read
    தொடை சதையை குறைக்க சில எளிய பயிற்சிகள் உங்களுக்காக!!!
    2 Min Read
    செல்ல நாய்க்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த உரிமையாளர்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை
தமிழகம்

காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை

admin
Last updated: January 10, 2025 3:00 pm
By admin 2 Min Read
Share
SHARE

வருசநாடு/மூணாறு: தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியம், கொம்புகாரன்புலியூர் கிராமத்திற்கு அருகிலுள்ள கடமலைக்குண்டு, பாம்புச்சேரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை, முருங்கை உள்ளிட்ட விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பாண்டி தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து அங்குள்ள 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தின.

தகவல் கிடைத்ததும், கண்டமனூர் வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். இந்நிலையில், இரண்டாவது முறையாக, இரண்டு நாட்களுக்கு முன்பு, அப்பகுதியில் உள்ள சுதாகர், அண்ணாதுரை, மகேஸ்வரன், சின்னசென்ராயன் ஆகியோரின் தோட்டங்களுக்குள் இரவில் காட்டு யானைகள் புகுந்து 25-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தின.

இதேபோல், இரண்டு நாட்களுக்கு முன்பு, உப்புத்துறை அடிவாரத்தில் உள்ள மலைசாமி மற்றும் சுந்தரம் ஆகியோரின் தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும், 50-க்கும் மேற்பட்ட இளவாலைகளையும் சேதப்படுத்தின. இது குறித்து வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், மலைக்கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

காட்டு யானைகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்டி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், கேரளா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பிரபலமான சுற்றுலா தலமான மூணாறில் காட்டு மாடுகள், யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் கன்னிமலை பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் கூட்டம், அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தி, மறுநாள் காலை 7 மணிக்கு அடர்ந்த வனப்பகுதிக்குத் திரும்பியது.

மேலும், தேயிலைத் தோட்டப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் தொழிலாளர்கள் பயந்து வேலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இது அவர்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. கடந்த சில நாட்களாக, காட்டு யானைகள் கூட்டம் குடியிருப்புப் பகுதிகளிலும், சாலையோரங்களிலும் சுற்றித் திரிவதால், மூணார் நகரப் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் வேலை முடிந்து வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக, எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், காட்டு யானைகளின் தொல்லையைத் தீர்க்க வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You Might Also Like

6 மணி நேரம் கடின அறுவை சிகிச்சை: 54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்

திருச்சி மண்டலம் சார்பில் தஞ்சையில் ஸ்டேட் வங்கி ஊழியர் கலந்தாய்வு கூட்டம்

ருசித்து சாப்பிட அருமையான சுவையில் குருமா செய்முறை

தொடை சதையை குறைக்க சில எளிய பயிற்சிகள் உங்களுக்காக!!!

செல்ல நாய்க்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த உரிமையாளர்

TAGGED:Elephantsfarmersmovementமூணாறுவருசநாடு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

6 மணி நேரம் கடின அறுவை சிகிச்சை: 54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?