சென்னை: தமிழகத்தில் பாஜக வெற்றி பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 2026-ல் பா.ஜ., நிச்சயம் வெற்றி பெறும். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் அதிக பெண் உரிமைத் தொகை வழங்கப்படும் என, சென்னையில் நடந்த மத்திய பட்ஜெட் தாக்கல் கூட்டத்தில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். தமிழக பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் தாக்கல் கூட்டம் சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியது:-
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் குறைந்தது 60 லட்சம் பேர் பயனடைகின்றனர். தமிழ் மாணவர்கள் தாய்மொழியில் பின் தங்கியுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தமிழை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யும் திமுக இதற்கு வெட்கப்பட வேண்டும். இந்தியாவில் எல்லா இடங்களிலும் தமிழ் கொண்டு செல்ல வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டால் மத்திய அரசிடம் இருந்து பா.ஜ.க. பெற்று தரும்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (சமக்ர சிக்ஷா) திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார். அதேபோல் 2026-ல் 35 ஊழல் அமைச்சர்களும் சிறை செல்வார்கள். 2026-ல் தமிழகத்தில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். தமிழிசை தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது. அந்த குழு இந்தியா முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு சென்று முதல்வர்களை சந்திக்க உள்ளது. அங்குள்ள நலத்திட்டங்களைப் பார்த்துவிட்டு 2026 பாஜக தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பார்கள். தற்போது தமிழகத்தை விட மகாராஷ்டிரா அதிக அளவில் பெண்கள் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது. டெல்லியிலும் ரூ. 2,500 அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் தலைவர் தமிழிசை பேசுகையில், “தமிழகத்தை காப்பாற்ற போவது ஆன்மிகம். தமிழகத்தை பா.ஜ., ஆளப்போகிறது. ஸ்டாலினை இந்த அக்காவும் தம்பியும் சேர்ந்து வீட்டுக்கு அனுப்புவோம். அண்ணா தமிழை வளர்க்கவில்லை என்பது தெரிய வேண்டும். ஆண்டாள் தமிழை வளர்த்தார். பெரியார் தமிழை வளர்க்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார். மாநில துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், சக்கரவர்த்தி, நாராயண திருப்பதி, மாநிலச் செயலர் கராத்தே தியாகராஜன், பிரமிளா சம்பத், சுமதி வெங்கடேசன், மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.