விழுப்புரம்: மேல்மலையனூர் தேரோட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 26-ம் தேதி அதாவது நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இதையடுத்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டம் மார்ச் 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்த திருதியை உற்சவத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அன்றைய தினத்தில் அவசர பணிகளை மேற்கொள்ளும் வகையில் விழுப்புரம் மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்களும் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும் என்றும், 4-ம் தேதி பள்ளிகளில் மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடத்தினால் அன்றைய தேதியில் வழக்கம் போல் தேர்வுகள் நடத்தப்பட்டு, மார்ச் 4-ம் தேதிக்கு பதிலாக, உள்ளூர் விடுமுறையாக அறிவித்து, மார்ச் 15-ம் தேதி வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.