மதுரை: மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி பொன்.வசந்த் தலைமையில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக அதிமுக முன்னாள் அமைச்சரும் மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்லூர் ராஜூ, தெற்கு தொகுதி ம.தி.மு.க எம்எல்ஏ பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் செல்லூர் ராஜு பேசுகையில், ”பொறுத்தது போதும், பொங்கி எழு மனோகரா படத்தில் வருவது போல, மாநகராட்சி கூட்டத்தில் பிரச்னைகளை பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்” என்றார்.
இதற்கு பதிலளித்த மேயர், “உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்ந்து கொள்ளுங்கள். மாநகராட்சி மன்றத்தில் பாரபட்சம் இல்லை” என்றார். தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, “முல்லைப் பெரியாறு நீர் திறப்பு எப்போது முடியும்? என்னை தெர்மாகோல் என ஓட்டுகிறார்கள். மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, பொறியாளர்களுடன் கலந்தாலோசித்து, தெர்மாகோல் மூலம் சோதனை நடத்தினோம். கலெக்டர் என்னுடன் வந்தாலும், என்னை ஓட்டு போட மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
வைகையூரில் இருந்து தெப்பக்குளத்துக்கு தண்ணீர் கொண்டு சென்று நிரப்ப வேண்டும். மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதி கேட்க வேண்டும்’ என தொடர்ந்தார். மாநகராட்சி கூட்டத்தில் குறைகளை பேசாமல் சொந்த பிரச்சனைகளை பேசுவதாக செல்லூர் ராஜூ குறித்து கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்தனர்.