சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:- 2026-ல் இந்திய பார்லிமென்ட் லோக்சபா தொகுதிகளை மக்கள் தொகை அடிப்படையில் மாற்றி அமைக்கும் போது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகள் குறையும் என்ற அச்சம் அனைவரிடத்திலும் உள்ளது.இந்த அச்சத்தை போக்க வேண்டிய மத்திய அரசு மேலும் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் தகவலை வெளியிடக்கூடாது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்வது சரியல்ல. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த விளக்கம் தெளிவாக இல்லை. மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் 7.20% தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், எந்த அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் என்பது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரியாமல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்தப் பிரச்னையில் தெளிவான முடிவை எடுக்க முடியாது.
மத்திய அரசின் முடிவை அறிந்து அதற்கேற்ப வியூகங்களை வகுப்பதே சரியானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். ஆனால், மார்ச் 5-ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்கும்.