சென்னை: “என்னைத் தவறாக சித்தரிக்கும் சில AI படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. தயவுசெய்து இந்தப் போலி காட்சிகளைப் பகிர்வதை நிறுத்துங்கள்” என்று நடிகை பிரியங்கா மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘ஒந்தே கதே ஹெல்லா’ என்ற கன்னடப் படத்தின் மூலம் அறிமுகமான பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ என்ற தமிழ் படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். சமீபத்தில் பவன் கல்யாணின் ‘OG’ படத்தில் நடித்தார். இந்த சூழ்நிலையில், ‘OG’ படத்தின் ஒரு பாடல் காட்சியில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

அந்தப் புகைப்படங்கள் உண்மையானவை அல்ல என்று பிரியங்கா மோகன் கூறியுள்ளார். தனது X பக்கத்தில் ஒரு பதிவில், “என்னைத் தவறாக சித்தரிக்கும் சில AI படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. தயவுசெய்து இந்தப் போலி படங்களைப் பகிர்வதையும் பரப்புவதையும் நிறுத்துங்கள்.
AI என்பது தவறான விஷயங்களுக்கு அல்ல, ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். நாம் எதை உருவாக்குகிறோம், எதைப் பகிர்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.”